Sunday, November 05, 2006

புலிகளா பயந்தாங்கொள்ளிகள்?

புலிகள் பயந்தாங்கொள்ளிகள், பேடிகள், கையாலாகாதவர்கள் என்று தோழர் விசரன் விசனப்பட்டுப் பதிவு போட்டுள்ளார். அவர் மேற்கூறியவற்றுக்குச் சொல்லும் காரணங்களில் ஒன்று தற்கொலைத் தாக்குதல்.

சிறுபான்மை இனத்துக்காகப் போராடும் ஒரு போராட்ட இயக்கம், உலக வல்லரசுகளின் துணையுடன் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் எதிரியை முறியடிக்க, தனக்குரிய ஆள், ஆயுத வளங்களைப் பொறுத்து அவ்வப்போது பயன்படுத்தும் போர் உத்தியைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவியாக விசரன் இருப்பாரென்று நம்ப முடியுமா?
விசரனுக்குத் தேவை என்னவென்று எங்களுக்குத் தெரியாதா?

சரி, யார் பயந்தாங்கொள்ளிகள் என்று பார்ப்போம்.
வீரம் மிக்க சிங்கள இராணுவத்தைப் புலிகளால் நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாததால் கோழைத்தனமான தற்கொலைத் தாக்குதலை நடத்துகிறார்களாம்.
யார் பயந்தாங்கொள்ளிகள்?
உயிரைத் துச்சமென மதித்து எதிரியைச் சிதறடிக்கும் புலிகளா பயந்தாங்கொள்ளிகள்?
உயிருக்குப் பயந்து புலிகள் வழியிலேயே ஒரு தாக்குதலைக்கூடச் செய்யத் தெரியாத சிங்களப்படைகளா வீரம் மிக்கவர்கள்?

இன்றும் கடலில் ஒரு தாக்குதல் நடந்தால் உடனே இந்தியாவின் மடிக்குள் ஓடி ஒழிந்துகொள்ளும் சிங்களப்படை இந்த விசரனுக்கு வீரப்படையாகத் தெரிகிறது. ஆனால் அவர்களை அன்னிய நாட்டிடம் தஞ்சமடைய வைக்கும் புலிப்படை கோழைப்படையாகத் தெரிகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள தங்கள் பத்தாயிரக்கணக்கான படைகளைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவிடமும் உலகிடமும் ஒப்பாரிவைத்த சிங்களப்படை வீரதீரப்படையாம். உலகில் எந்த நாட்டுப்படைகளும் போராட்டக்குழுவிடமிருந்து காப்பாற்றும்படி இப்படிக் கெஞ்சிய சரித்திரமில்லை.
யாரையா பயந்தாங்கொள்ளிகள்?

இன்றுவரை எந்த நாட்டின் உதவியுமில்லாமல் தனித்துப் போராடி வருகிறது புலிகள் அமைப்பு. ஆனால் சிங்கள அரசோ உதவி பெறாத நாடில்லை. அனைத்து வல்லரசுகிளின் உதவிகளோடு போரிட்டும் அதனால் வெற்றி பெறமுடியவில்லை என்பதோடன்றி தோல்வியையும் தவிர்க்க முடிந்ததில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல், ரஸ்யா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று அனைவரிடமும் கெஞ்சிக்கூத்தாடி, கடன்வாங்கி அவர்களின் ஆலோசனையோடு போரிடும் அரசுக்கெதிராக போரிட்டு அதை திகலூட்டும் புலிகள் கோழைகளாம். இத்தனையும் இருந்தும் பதுங்கிக்கிடக்கும் சிங்களப்படை வீரப்படையாம்.

புலிகளைக் கொல்லத் தெரியாமல் மக்கள்மீது குண்டுபோட்டுக் கொன்றுவிட்டு புலியைக்கொன்றதாகக் கணக்குக் காட்டிப் பிழைப்பு நடத்தும் சிங்களப்படையா வீரம் மிக்கது?
இதுவரை தாம் கொன்றதாகச் சிங்களப்படைகள் சொல்லிய கணக்கென்ன? வெறும் 7000 பேர் கொண்ட புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என்று சரத் பொன்சேகா சொன்னபின் சிங்கள இராணுவத்தரப்பு வெளியிட்ட குறைந்தபட்ச புலிகளின் இழப்பு விவரம் 2200 பேர் சாவு, 3300 பேர் காயம். இன்னும் சிங்கள இராணுவம் யாருடன் போரிடுகிறது?
இப்படி உலகமகா பொய்களைச் சொல்லி சுகப்பட்டுக்கொள்ளும் சிங்கள இராணுவமா வீரம் மிக்கது?

புலிகளுடன் நேரடியாக மோதப்பயந்து மக்கள் மீது பொருளாதார - மருந்துத் தடைகளைப்போட்டு தன் எண்ணத்தைச் சாதிக்க முற்படுகிற சிங்கள இனவெறி அரசு எப்படி வீரப்படையாக இருக்குமென்பது அந்த விசரனுக்குத்தான் வெளிச்சம்.

சரி, விசரன் வழியிலேயே ஒரு விசர்க்கேள்வியைக் கேட்போம்.
புலிகளுடன் நேருக்கு நேர் மோதத் தைரியமில்லாமல் தானே சிங்களப்படை வான்வழியால் குண்டுவீசுகிறது? கொழும்புச் சிங்களக் கும்பலின் கையாலாகாத - பேடித்தனமான தாக்குதல் முறைதானே இந்த வான்தாக்குதல்? தைரியமிருந்தால் (ஆம்பிளையெண்டா, மீசை இருந்தால், எண்டு விரும்பின சொற்களைச் சேர்த்துக்கொள்ளவும்) வான்படைத்தாக்குதல் இல்லாமல் புலிகளுடன் மோதத் தயாரா?
பிறகெப்படி சிங்களப்படை வீரதீரப்படையாக இருக்க முடியுமென்று விசரன் தெளிவுபடுத்துவாரா?

அடுத்து, சிறுவர்களை வைத்துச் சண்டைபிடிக்கிறார்கள் என்று அதே கட்டுரையில் உளறியிருக்கிறார் விசரன்.
சரி, அவரின் கதைப்படி வைத்துக்கொண்டாற்கூட சின்னப்பிள்ளையளோட சண்டைபிடிக்கத் தெரியாத இராணுவத்தை - சின்னப்பிள்ளையளின்ர தாக்குதலைக்கண்ட உடன மூத்திரம் போற இராணுவத்தை எப்படி இந்த விசரன் வீர - தீர - பராக்கிரம இராணுவமாகச் சொல்கிறார்?

எல்லாம் விசரனுக்கே வெளிச்சம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4