« Home | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

ஊடகப் புழுகுகள்

2006ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக் சிறீ லங்கா அரசு முல்லைதீவு விமான தாக்குதல் பற்றிய படம். இந்த படத்தை போர்நிறுத்த குழுவினர் எற்கனவே நிராகரித்து விட்டனர். போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஜெமினி அல்லது ஜெயதேவன் போன்று கத்துக்குட்டிகள் அல்ல. முறையாக இராணுவப்பயிற்சி பெற்ற இராணுவ தளபதிகள். ஆனால் இந்த கத்துக்குட்டி பத்திரிகையாளர்கள் எல்லாம் சிந்திப்பது தாங்கள் ஏதோ சண்டே ரைம்ஸ் இக்பால் அத்தாஸ் என்று. பாவம் இப்ப அந்த நபருக்கும் தகவல்கள் மிக கம்மியாகவே வருகிறது. இந்த லட்சணத்தில் ஜெமினி ஒரு பெரிய ஜோக் அடித்திருக்கிறார்.

நேற்று கிளாலியில் புலிகள் 100பேர் பலியானதாகவும் அவர்களின் படங்களை தன்னை தவிர யாரும் போடவில்லை என்று. அட பாவி! இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் கூட வராத படங்கள் உனக்கெப்படி கிடைச்சது?. தம்பி டேய் ஜெமினி நீ வெகுவிரைவில் இரண்டாவது இக்பால் அத்தாஸ்தான். இராணுவத்திலை அவ்வளவு செல்வாக்கு. இராணுவ தலைமையகத்திற்கு அவங்கள் செதி அனுப்ப முதல் யேர்மன் ஸ்ருட்காட்டுக்கு போன் பண்ணி உன்றை மனிசியிற்றை அவங்கள் தகவல் சொன்ன பிறகு தான் கொழும்புக்கே தகவல் சொல்லுறாங்கள் ஆக்கும்.

புலிகளின் உடல்களை ஐசிஆர்சியிடம் இந்தா குடுக்கிறம் அந்த குடுக்கிறம் எண்டு இராணுவம் வேடிக்கை காட்டிப்போட்டு பாவம் அப்பாவியள் 21பேரின்றை பிரேதத்தை பொலீசார் எடுத்திச்சினம் என்டு ஒரு செய்தி வந்தது. நாங்களும் இப்ப இரண்டு நாளா புலியளின்றை 90 சடலப் புகைப்படத்தை தேடிறம். ஒரு இடமும் அகப்படவில்லை. ஆனா ஜெமினிக்கு மட்டும் எங்கையோ கிடைச்சிட்டுது. நாங்கள் இந்த படத்தை நல்ல பெரிசா எங்கடை கணனியிலை போட்டு பாத்தா எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாத ஒரு நல்ல பகிடி தெரிஞ்சுது. புலியளாலை ஒரு காலத்திலை கொல்லப்பட்ட இராணுவத்தின்றை சடலங்களை அப்படியே உல்ட்டா பண்ணி ஜெமினி அதை புலியள் என்டு போட்டிருக்கிறார். அது மட்டுமில்லை இவர் அவசரத்திலை படத்தின்றை பேரையும் மாத்த மறந்திட்டார். அட அதை தான் விடு அவருக்கோ இதிலை கோவமும் எல்லே வருது. மற்றைய இணைய தளம் ஒண்டும் அந்த படத்தை பிரசுரிக்கேல்லையாம். தாங்கள் தான் ஒரு மிகவும் உண்மையான ஜனநாயகமான ஊடகம் துணிந்து பிரசுரிச்சிரிக்கினமாம்.

அட பாவி மனிசா புலியை எங்களுக்கும் தான் பிடிக்காது. அதுக்கு இப்பிடி மானங்கெட்ட பிழைப்பு நடத்தவேணுமே. சிறீ லங்கா இராணுவம் கூட இந்த அளவு சிந்திக்கேல்லை. அனால் உமக்கு மட்டும் ஏன் இப்பிடி ஒரு ஆசை. தம்பி ஜெமினி நீ உண்மையிலை நடிகன் ஜெமினி தான்றா. ஆனால் அவன் உன்னை விட பரவாயில்லை நாலு பெண்டாட்டியை பிடிக்க அவன் பல பொய் சொன்னான். ஆனால் நீ உன்றை மனச்சாட்சியை விக்க இப்பிடி புழுகிறாய்.

நன்றி: தேனீ

சூப்பர் பதிவு.

உப்பிடிச் சொல்லுது india today அதை அள்ளிப்போட்டிருக்கிறது sri lanka defence ministry site.
தலித்துகள் tribes என்று போட்டிருக்கினம். அப்படியானால் மலைவாசிகளை ஆர்

Dalit Panthers of India (DPI) is a tribal organization that supports the LTTE's cause for an ethnically pure Tamil homeland in Sri Lanka.

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4